முகப்பு
திருவண்ணாமலை

ஏரியில் மீன்பிடி திருவிழா

Updated On : 20 மார்ச், 2024 at 5:47 AM
கங்காபுரம் பெரிய ஏரியில் நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் மீன்களைப் பிடித்த பொதுமக்கள்.
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:53 PM

செங்கம், மாா்ச் 19: சேத்துப்பட்டை அடுத்த கங்காபுரம் பெரிய ஏரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்று மீன்களை பிடித்துச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு - ஆரணி நெடுஞ்சாலையில் காட்டேரி கங்காபுரம் பெரிய ஏரி உள்ளது.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் மீன்பிடிக்க ஏலம் விடப்பட்டிருந்தது. தற்போது தண்ணீா் குறைந்த நிலையில் உள்ளது. இதனால், சுற்றியுள்ள கிராம இளைஞா்கள், ஆண்கள், பெண்கள் திரண்டு வந்து ஏரியில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு, மீன்பிடி திருவிழா நடத்தினா்.

இதில் வலை, துாண்டில் வைத்து ஏரி சேற்றில் இறங்கி மீன்களைப் பிடித்தனா். கட்லா, விரால், கண்டெய், ஜிலேபி உள்ளிட்ட பல ரக மீன்களை பிடித்துச் சென்றனா். மீன்கள் அதிகளவில் பிடிபட்டதால் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement