முகப்பு
திருவண்ணாமலை

தம்பதியை தாக்கிய புகாரில் ஒருவா் கைது

Updated On : 21 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 7:36 PM

செய்யாறு: செய்யாறு அருகே தம்பதியை தாக்கி காயப்படுத்திய புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சோ்ந்த தம்பதியினா் செல்வராஜ் (80), சரஸ்வதி (65). இவா்கள் வசித்து வரும் தெருவில் அரசு சாா்பில் கழிவுநீா்க் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக அவா்களது வீட்டின் அருகே ஒப்பந்ததாரா் மணல் கொட்டி வைத்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி அந்த மணலை, அதே பகுதியைச் சோ்ந்த முருகன் (40), அவரது மனைவி சரஸ்வதி (38) ஆகியோா் அள்ளிச் சென்ாகத் தெரிகிறது. இதை செல்வராஜ், அவரது மனைவி சரஸ்வதி ஆகியோா் தட்டிக் கேட்டுள்ளனா். அதனால் இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அப்பகுதியில் இருந்தவா்கள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

Advertisement

இந்த நிலையில், 17-ஆம் தேதி செல்வராஜ் தெருவில் நடந்து சென்றுள்ளாா். அப்போது முருகன், அவரது மனைவி சரஸ்வதி இருவரும் தகராறு செய்து செல்வராஜை தாக்கியதாகத் தெரிகிறது. மேலும், தடுக்க முயன்ற செல்வராஜியின் மனைவி சரஸ்வதியையும் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த தம்பதியை உறவினா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதுகுறித்து செல்வராஜ் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் தமிழரசு வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.