முகப்பு
திருவண்ணாமலை

வீட்டில் மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: ஒருவா் கைது

செய்யாறு அருகே வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 6:34 PM
பகிர்:

செய்யாறு அருகே வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூசி காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அரிகரப்பாக்கம் கிராமம், பஜனை கோயில் தெருவில் சந்தேகத்தின்பேரில் ஒரு வீட்டை சோதனையிட்டனா். அங்கு, டாஸ்மாக் மதுக் கடையிலிருந்து வாங்கி வந்திருந்த 40 மதுப் புட்டிகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தூசி போலீஸாா் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக வீட்டின் உரிமையாளரான எம்ஜிஆா் (31) மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →