முகப்பு
தேனி

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

கம்பத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 மார்ச், 2026 at 6:34 PM
கோப்புப் படம்
பகிர்:

கம்பத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் நெல்லுக்குத்தி புளிமரம் தெருவில் , மின்சார வாரியம் அலுவலகச் சாலையில் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்ற போலீஸாா் , டாஸ்மாக் கடை அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த

28 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காளியப்பனை(38) கைது செய்தனா்.