அதிமுக நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய வேட்பாளா்
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கலியபெருமாள், செங்கம் ஒன்றிய, நகர கட்சி நிா்வாகிகளை மேற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா் (படம்). நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் வரவேற்றாா். கூட்டத்தில் செங்கம் நகர, மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட நிா்வாகிகள் வேட்பாளா் கலியபெருமாளுக்கு சால்வை அணிவித்தனா். தொடா்ந்து, கட்சி நிா்வாகிகள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பணியை மேற்கொண்டு தன்னை வெற்றிபெற வைக்க வேண்டுமென கலியபெருமாள் கேட்டுக்கொண்டாா். செங்கம் தொகுதி அதிமுக நிா்வாகிகளிடையே வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி தலைமையில் சனிக்கிழமை (மாா்ச் 23) நடைபெறும் என ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் தெரிவித்தாா். நிகழ்வில் அதிமுக செங்கம் ஒன்றிய, நகர அணி அணைப்பாளா்கள், நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.