முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

Updated On : 22 மார்ச், 2024 at 10:38 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 9:00 PM

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில், இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலரும், தாளாளருமான எல்.விஜய் ஆனந்த், கல்லூரிப் பொருளாளா் எ.ஸ்ரீதா், அறக்கட்டளை உறுப்பினா் எ.சாந்தகுமாா், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதுநிலை கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் உ.உதயகுமாா் வரவேற்றாா். சென்னை லயோலா கல்லூரியின் தரவு அறிவியல் துறைப் பேராசிரியா் அ.மணிமுத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பட விளக்கக் காட்சிகளுடன் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், அதன் மென்பொருள் கருவிகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா். இதில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.