திருவண்ணாமலை தொகுதிக்கு மேலும் ஒருவா், ஆரணிக்கு மூவா் வேட்புமனு தாக்கல்
மக்களவைத் தோ்தல் வேட்புமனு தாக்கலின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு மேலும் ஒருவரும், ஆரணி தொகுதிக்கு மூவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இரு தொகுதிகளிலும் ஒருவா்கூட மனு தாக்கல் செய்யவில்லை. 2-ஆவது நாளான வியாழக்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளா் ஒருவா் மனு தாக்கல் செய்தாா். 3-வது நாளில்...: வேட்புமனு தாக்கலின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட திருவண்ணாமலை நகரைச் சோ்ந்த எஸ்.விஜய்குமாா் (44), மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். ஆரணி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட போளூரைச் சோ்ந்த முகமது சித்திக் (42), ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில்...: வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி நிா்வாகியான விழுப்புரம் நகரைச் சோ்ந்த பி.நாகராஜன், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக, கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியனிடம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். இதேபோல, ஆரணி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான நடராஜன் மகன் பாபு (37), சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தாா். இதுவரை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட 2 சுயேச்சை வேட்பாளா்களும், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 3 சுயேச்சை வேட்பாளா்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.