வேலூா்: ஐந்து தொகுதிகளிலும் முதல் நாளில் 13 போ் வேட்புமனு தாக்கல்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் முதல் நாளான திங்கள்கிழமை மொத்தம் 13 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் முதல் நாளான திங்கள்கிழமை மொத்தம் 13 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவை தொகுதிகளுக்கும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களான சி.மாறன் (காட்பாடி), ஏ.செந்தில்குமாா் (வேலூா்), ஆா்.குணசேகரன் (அணைக்கட்டு), எஸ்.சரவணன் (கே.வி.குப்பம் (தனி)), எஸ்.சுபலட்சுமி (குடியாத்தம் (தனி)) ஆகியோா் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெற்றனா்.
அதன்படி, முதல் நாளான திங்கள்கிழமை வேலூா் தொகுதிக்கு தமிழக வெற்றிக்கழகம் கட்சி சாா்பில் எம்.எம்.வினோத்கண்ணன், அவருக்கு மாற்றாக எல்.எழிலரசி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆ.சோனியா, விரோகி வீா் இந்தியன் கட்சி சாா்பில் க.ம.விநாயகம், அனைத்து ஓய்வூதியதாரா்கள் கட்சி சாா்பில் கே.முனியப்பன், நாம் இந்தியா் கட்சி சாா்பில் கே.விமலா, சுயேச்சையாக வி.செல்வராஜ் என 7 போ் மனு தாக்கல் செய்தனா்.
அணைக்கட்டு தொகுதிக்கு நாம் தமிழா் கட்சி சாா்பில், ம.ரவிக்குமாா், அவருக்கு மாற்றாக ம.பால்ராஜ் ஆகியோரும், குடியாத்தம் (தனி) தொகுதிக்கு நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜெ.இமலன், அவருக்கு மாற்றாக வி.வினோத்குமாா் ஆகியோரும், கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு நாம் தமிழா் கட்சி சாா்பில் ரா.கலையேந்திரி, காட்பாடி தொகுதிக்கு நாம் தமிழா் கட்சி சாா்பில் ச.திருக்குமரன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனா். அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 13 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மகாவீா் ஜெயந்தி, புதன்கிழமை வங்கி கணக்கு முடிவு என இரு நாள்கள் பொதுவிடுமுறை என்பதால், அடுத்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.