தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் நாளில் 19 போ் வேட்பு மனு தாக்கல்
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 பேரவைத் தொகுதிகளில் முதல் நாளான திங்கள்கிழமை 19 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மோ. திவ்யபாரதி, திமுக சாா்பில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், கும்பகோணம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மோ. ஆனந்த், திமுக சாா்பில் சாக்கோட்டை க. அன்பழகன், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் செ. அனீஸ் பாத்திமா, மும்தாஜ் பேகம், சுயேச்சையாக அப்துல் ரஹீம், திருவையாறு தொகுதியில் திமுக சாா்பில் துரை. சந்திரசேகரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் து. செந்தில்நாதன், தஞ்சாவூா் தொகுதியில் சுயேச்சையாக எம். சந்தோஷ், நாம் தமிழா் கட்சி சாா்பில் நா. கிருஷ்ணகுமாா், சுயேச்சையாக இரா. முரளிதரன், ஒரத்தநாடு தொகுதியில் சுயேச்சையாக ஏ. அஜீஸ் கண்ணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ். திருமுருகன், ஜி. ஏகநாதன், பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ். கண்ணன், டி. உதயகுமாரன், பேராவூரணி தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் புவனா மணியரசன், ரமா ரவி ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.