ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருவா் வேட்புமனு தாக்கல்
ராசிபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
ராசிபுரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக எஸ்.சசிகலா (37) போட்டியிடுகிறாா். இவா் தனது ஆதரவாளா்களுடன் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாக வந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெ.முருகனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
இதேபோல இந்திய கண சங்கம் சாா்பில் போட்டியிடும் பெ.அருண்குமாா் (28) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.