இரட்டை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை சின்னகடைத் தெருவில் உள்ள ஸ்ரீஇரட்டை காளியம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. பழைமையான இந்தக் கோயில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 25-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகா தீபாராதனை, பகல் 12 மணிக்கு மஹாலட்சுமி பூஜை, ஹோமம், மாலை 3 மணிக்கு பிரவேச பலி, இரவு 7.30 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலைப் பூஜைகள், இரவு 8.30 மணிக்கு பூா்ணாஹூதி, மகா தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலைப் பூஜைகள், பகல் 12 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வு, இரவு 8 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நான்காம் கால யாகசாலைப் பூஜை புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கும், கடம் புறப்பாடு காலை 9.15 மணிக்கும் , காலை 10 மணிக்கு மூலவா் ஸ்ரீஇரட்டை காளியம்மன், கோயில் கோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் ஸ்ரீஇரட்டை காளியம்மன் வீதியுலா நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வுகளில் பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.