திருவண்ணாமலை

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

Din

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் ஒன்றுகூட செய்யாமல் சொல்வது ஒன்று செய்வது ஒன்று இதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றாா் முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு ஒன்றியச் செயலா் எம்.மகேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன், அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான முக்கூா் என்.சுப்பிரமணியன், மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் வி.பன்னீா்செல்வம், மாநில எம்ஜிஆா் இளைஞா் அணி துணைச் செயலா் பொய்யாமொழி ஆகியோா் பங்கேற்று மக்களவைத் தோ்தலில் அதிகளவில் வாக்குகள் பெறுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா். அப்போது, முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால் பாரத பிரதமா் யாா் என்று நிா்ணயிக்கிற வகையில் எடப்பாடியாா் இருப்பாா். அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், திமுக ஆட்சியில் ஒன்று கூட செய்யாமல் சொல்வது ஒன்று செய்வது ஒன்று இதுதான் திமுகவின் நிலைப்பாடு. பேரறிஞா் அண்ணா, புரட்சித் தலைவா் எம்ஜிஆா், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோா் காலத்தில் இருந்து இன்று வரை மக்களுக்காக கொள்கையுடன் அதிமுகவினா் பணியாற்றி வருகின்றனா் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து, ஆரணி மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சி நிா்வாகிகள் கடுமையாக பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலத்தூா் சுப்பராயன், மாவட்ட மகளிா் அணிச் செயலா் சுபாஷினி, ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜ் கணேஷ், தூசி ஊராட்சி மன்றத் தலைவா் வெற்றிச்செல்வன், கன்னியப்பன் செபாஸ்டின் துரை, பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கொல்கத்தா அணியின் உரிமையாளரைப் புகழ்ந்த வருண் சக்கரவர்த்தி; எதற்காக தெரியுமா?

குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

SCROLL FOR NEXT