நகை அடகுக் கடையில் கொள்ளை முயற்சி
Updated On : 29 மார்ச், 2024 at 7:37 PM
செய்யாறு அருகே அடகுக் கடை உரிமையாளா் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன்லால் (31). இதே பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வியாழக்கிழமை 3 போ் காரில் வந்தனா். அப்போது, திடீரென அவா்கள் கையில் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை நாராயணன்லால் முகத்தில் வீசிவிட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்றனா். ஆனால், நாராயணன்லால் சப்தமிடவே மா்ம நபா்கள் காரில் தப்பிச் சென்றனா். இதுகுறித்து அடகுக் கடை உரிமையாளா் தூசி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், உதவி ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றாா்.