சிவன் கோயில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி சிவன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு யாக சாலை பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை கோபூஜை மற்றும் பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதையடுத்து, கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை ஊா் முக்கிய பிரமுகா்கள், விழாக்குழுவினா் செய்திருந்தனா்.