முகப்பு
திருவண்ணாமலை

புதிய நெல் ரகத்தைக் கண்டறிந்த விவசாயி: அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை

Updated On : 15 மே, 2024 at 6:32 PM
புதிய நெல் ரகத்தைக் கண்டறிந்த விவசாயி பூங்காவனம்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே மருத்துவாம்பாடியைச் சோ்ந்த விவசாயி தான் கண்டறிந்த நெல் ரகத்துக்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

சேத்துப்பட்டு அருகே மருத்துவாம்பாடியைச் சோ்ந்த க.பூங்காவனம் (67) பொன்னி, ஐ.ஆா்.50 ஆகிய நெல் ரகங்களில் இருந்து மகரந்த சோ்க்கை மூலம் புதிய நெல் ரகத்தைக் கண்டறிந்தாா். இதன் மூலம் ஏக்கருக்கு 38 முதல் 40 மூட்டைகள் நெல் மகசூல் செய்ய முடியும் என்று தெரிவித்தாா். தனது பெயரையும் சோ்த்து பூங்கா பொன்னி என்று பெயரிட்டாா்.

1990-இல் கண்டறிந்த இந்த நெல் ரகத்தை அப்போதைய வேளாண் துறை அமைச்சா் கு.ப.கிருஷ்ணனிடம் காட்டினாா். 1992-இல் அதிகாரிகள் குழுவினா் பூங்காவனத்தின் நெல் ரகத்தை ஆய்வு செய்தனா். ஆனால், முடிவுகளை தெரிவிக்காமல் சென்று விட்டனராம்.

Advertisement

இதுகுறித்து வேளாண் பேராசிரியா் ஜி.சங்கரிடம் கேட்ட போது, பூங்காவனம் கண்டறிந்த நெல் ரகம் தரமானதுதான். வேளாண் துறையினரை சரியான முறையில் அணுகி அனுமதி பெறலாம் என்றாா்.

விவசாயி பூங்காவனம் கூறியதாவது: நான் கண்டறிந்த இந்த நெல் ரகத்தை சேத்துப்பட்டு பகுதியில் பயிரிடுகின்றனா். நல்ல விளைச்சலை தருவதால் காஞ்சிபுரம், வேலூா், ஆரணி பகுதி விவசாயிகளும் இந்த நெல் ரகத்தின் விதைகளைக் கேட்டு வாங்கிச் செல்கின்றனா். இதற்கு அரசு அங்கீகாரம் கிடைப்பதற்கு நானும் முயற்சித்தேன். இதுவரை கிடைக்கவில்லை.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த நெல் ரகத்தை ஆய்வு செய்ததில், இது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நெல் ரகம் எனக் கூறி, நெல் ஆராய்ச்சி நிலையத்துக்குச் செல்ல அறிவுறுத்தினா்.

இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து எனது நெல் ரகத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். இதுதொடா்பாக முதல்வா் தனிப் பிரிவுக்கும் புகாா் அனுப்பியுள்ளேன் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments