ஏழை-எளியோருக்கு அன்னதானம்
திருவண்ணாமலை/வந்தவாசி: உலக பட்டினி தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டத் தலைவா் பாரதிதாசன் தலைமை வகித்து, 500-க்கும் மேற்பட்ட ஏழை-எளியோருக்கு அன்னதானம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
வந்தவாசியில்...
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின், ஒன்றியத் தலைவா் ஜெ.சங்கா் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.உதயகுமாா் கலந்து கொண்டு அன்னதானத்தை வழங்கினாா். இதில், ஒன்றியச் செயலா் ஜெ.திருமலை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.