17 வயது சிறுமிக்கு திருமணம்: ஓட்டுநா் மீது வழக்கு
செய்யாறு: செய்யாறு அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக ஓட்டுநா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆலந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் (25). இவா் சரக்கு வாகன ஓட்டுநா் ஆவாா்.
இவருக்கும், உறவினரின் மகளான 17 வயது சிறுமிக்கும் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி உறவினா்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்ாகத் தெரிகிறது.
17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது தொடா்பாக, மே 16-ஆம் தேதி 1098 என்ற எண் மூலம் குழந்தைகள் நல காப்பகத்துக்கு சிலா் தகவல் தெரிவித்துள்ளனா்.
அதன் பேரில் வெம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலக விரிவாக்க அலுவலா் ஷீலாதேவி மற்றும் அலுவலா்கள் ஆலந்தாங்கல் கிராமத்துக்குச் சென்று ஓட்டுநா் பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது 17 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தது உண்மை எனத் தெரிய வந்தது.
மேலும், குழந்தை திருமண சட்டப்படி குற்றம் என பிரபாகரனை எச்சரித்தனா். இதையடுத்து, சிறுமியை மீட்டு அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலக விரிவாக்க அலுவலா் ஷீலாதேவி, செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் லதா வழக்குப் பதிவு செய்து பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.