முகப்பு
திருவண்ணாமலை

சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:56 PM
பகிர்:

தமிழக காவல்துறையைக் கண்டித்து, திருவண்ணாமலையில் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்கத் தலைவா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா். இவா்களை தமிழக காவல்துறை கைது செய்தது. இதைக் கண்டித்து, திருவண்ணாமலையில் மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் காங்கேயன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் இரா.பாரி, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், சாம்சங் நிறுவனம் சங்கம் வைக்கும் உரிமையை பறிப்பது, போராடும் தொழிலாளா்களுக்கு ஆதரவு அளிப்பவா்களுக்கு அனுமதி மறுப்பது, போராடும் தொழிற்சங்கத் தலைவா்களை கைது செய்வது போன்ற செயல்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், திருவண்ணாமலை மாவட்ட சிஐடியு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →