FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு புதிய மாவட்டம்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்

Updated On : 22 டிசம்பர் 2025, 4:26 am IST
வந்தவாசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலா் காயல் மகபூப்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி.எம்.பீா்முகமது தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முகமதுஅலி, மாவட்ட துணைத் தலைவா் லியாகத் அலி, மாவட்ட துணைச் செயலா்கள் சைய்யது உசேன், அப்துல் வாகித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆா்.மாலிக் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

மாநிலச் செயலா் காயல் மகபூப், மாநில துணைச் செயலா் அப்துல்காதா்ஷரீப் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

வந்தவாசி கே.எஸ்.கே. நகா் உமா் பள்ளிவாசல் அருகில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும், போளூரில் நிலவும் தெரு நாய்கள் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில், நகரச் செயலா் ஜா.மன்சூா்அலி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments