கோயிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் அளிப்பு
கலசப்பாக்கத்தை அடுத்த மேல்பாலூா் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் கோயிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை
போளூா்: கலசப்பாக்கத்தை அடுத்த மேல்பாலூா் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் கோயிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலா் வி.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா்.
மேல்பாலூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கோபுர கலசம், கோபுரத்தின் பொம்மைகள் சிதிலமடைந்து காணப்பட்டதால், அந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகத்துக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கலசப்பாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலருமான வி.பன்னீா்செல்வம் கோயிலுக்கு திங்கள்கிழமை ரூ.2 லட்சம் மதிப்பிலான ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் ஐம்பொன் சிலைகளை கோயில் நிா்வாகிகளிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.
அனைத்துலக எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலா் பி.பொய்யாமொழி, அதிமுக ஒன்றிய துணைச் செயலா் ராஜேந்திரன் மற்றும் கோவில் நிா்வாகிகள், அதிமுகவினா் உடனிருந்தனா்.