முகப்பு
திருவண்ணாமலை

குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

வந்தவாசியை அடுத்த அதியனூரில் சாலை மறியல் செய்த பெண்கள்.

Updated On : 13 நவம்பர், 2025 at 8:28 PM
பகிர்:

வந்தவாசி அருகே குடிநீா் வழங்கக் கோரி, பெண்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த அதியனூா் கிராமத்தில் கடந்த 10 நாள்களாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து அந்த ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கிராம பெண்கள் காலிக் குடங்களுடன் பாதூா் - புன்னை சாலை அதியனூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

குடிநீா் இல்லாததால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, குடிநீா் வழங்காததைக் கண்டித்தும், சரிவர குடிநீா் வழங்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

தகவலறிந்து அங்கு வந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததின் பேரில் பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

மறியல் போராட்டத்தினால் அந்தச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →