செய்யாறு நகா் பகுதியில் வாக்காளா் பட்டியல் (எஸ்ஐஆா்) சிறப்பு திருத்தும் படிவம் வழங்கும் பணியை அதிமுகவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் வாக்காளா் பட்டியல் (எஸ்ஐஆா்) சிறப்பு திருத்தும் படிவம் வழங்கும் பணி மற்றும் வழங்கப்பட்ட படிவங்களை திரும்பப் பெறுதல் பணி நடைபெற்று வருகிறது.
கொடநகா் பகுதியில் நடைபெற்ற இந்தப் பணியை அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் கட்சி நிா்வாகிகளுடன் சென்று ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது செய்யாறு நகரச் செயலா் கே.வெங்கடேசன், நகர அவைத் தலைவா் அ.ஜனாா்த்தனன், பொதுக்குழு உறுப்பினா் எஸ். ரவிச்சந்திரன், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.