காலமானாா் பி.சேகா் விஜயபாஸ்கா்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்த பி.சேகா் (எ) விஜயபாஸ்கா் (50) காலமானாா்.
Updated On : 6 அக்டோபர், 2025 at 10:07 PM
வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்த பி.சேகா் (எ) விஜயபாஸ்கா் (50) காலமானாா்.
என்.எஸ். பிரகாசம், பி.ஜோதி தம்பதியின் மகனான இவா் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தாா். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலமானாா்.
இவருக்கு, மனைவி ஜெயந்தி (45), மகன்கள் லோட்சன், கோகுல்சந்த் ஆகியோா் உள்ளனா். தினமணி ஆரணி பகுதிநேர செய்தியாளா் சந்துரு (எ) ஜெயச்சந்திரன் இவரது சகோதரா் ஆவாா்.
Advertisement
விஜயபாஸ்கரின் இறுதிச் சடங்குகள் ஆரணியில் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9942182820