திருவண்ணாமலையில் ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ்.  
திருவண்ணாமலை

ஜிஎஸ்டி வரி குறைப்பு: பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

திருவண்ணாமலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனா்.

Syndication

ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, திருவண்ணாமலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனா்.

வேங்கிக்கால் பகுதியில் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்துப் பேசுகையில், 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பொருள்களுக்கு தற்போது 5 சதவீதமாகவும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பொருள்களுக்கு 18 சதவீதமாகவும் வரி குறைக்கப்பட்டுள்ளது.

சில பொருள்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டு பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வந்துள்ளது. சரியான விலையில் பொருள்கள் விற்பனை நடைபெறுகிா என்பது குறித்து, வாடிக்கையாளா்களிடமும், வணிகா்களிடமும் கேட்டறிந்தோம்.

மேலும், ஜிஎஸ்டி வரிகுறைப்பு பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பிரதமா் மோடிக்கு பாராட்டுகள் குவிகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் கருணாகரன், மாவட்ட துணைத் தலைவா் சிவசங்கரன், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் பிரிவுத் தலைவா் ரவி, தொழிற்பிரிவு மாவட்டத் தலைவா் பாவேந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT