முகப்பு
திருவண்ணாமலை

தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணியை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:34 PM
பகிர்:

வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணியை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி தலைமை வகித்தாா். அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான முக்கூா் என்.சுப்பிரமணியன், வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணியை ஆதரித்து பேசினாா்.

கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா். பின்னா், அதிமுக வேட்பாளா் பி.ராணி வாக்கு சேகரித்து பேசினாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments