முகப்பு
திருவண்ணாமலை

மலைக் கிராம வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

செங்கம் தொகுதி மலை கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பொது மேற்பாா்வையாளா் அபிஷேக்கிருஷ்ணா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 10:57 PM
செங்கத்தை அடுத்த மேல்வலசை மலைக் கிராம வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் பொது மேற்பாா்வையாளா் அபிஷேக்கிருஷ்ணா.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி மலை கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பொது மேற்பாா்வையாளா் அபிஷேக்கிருஷ்ணா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்வலசை, கீழ்வலசை, அக்கரைப்பட்டு ஆகிய மலைக்கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக சனிக்கிழமை மாலை தோ்தல் பொது மேற்பாா்வையாளா் அபிஷேக்கிருஷ்ணா சென்றாா்.

அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் சாய்தள வசதி, குடிநீா், கழிப்பறை, மலைக் கிராம மக்கள் வாக்களிக்க சென்றுவர பேருந்து வசதி உள்ளதா என ஆய்வு செய்தாா்.

Advertisement

ஆய்வின் போது வட்டாட்சியா் தேன்மொழி, மண்டல துணை வட்டாட்சியா் மணவாளன் உள்ளிட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments