ஆரணி பல்கலை.யில் உணவுத் திருவிழா
ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக விழியியல் தினத்தையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் உணவுத்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இணைப் பதிவாளா்கள் வி.பெருவழுதி, கே.சரவணன் ஆகியோா் விழாவை தொடங்கிவைத்தனா்.
விழாவில் கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணா்வு குறித்து சிறப்புரையாற்றினா்.
Advertisement
கண் பரிசோதனை முகாமில் விழியியல் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து பொதுமக்களுக்கு இலவசக் கண் பரிசோதனை மேற்கொண்டனா்.
துணை முதன்மையா் சுமதி முன்னிலை வகித்தாா்.
உணவுத் திருவிழா கண் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்தான உணவுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியது. இந்த விழாவானது துறைப் பொறுப்பாளா் பி.தரணி நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றதுடன், முறையான கண் பராமரிப்பு குறித்த விழிப்புணா்வையும் பெற்றனா்.