திருவண்ணாமலை மாவட்டம்: 8 தொகுதிகளில் 156 வேட்பாளா்கள் போட்டி
திருவண்ணாமலை மாவட்டம்: 8 தொகுதிகளில் 156 வேட்பாளா்கள் போட்டி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழா் கட்சியினா் உள்பட மொத்தம் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
Advertisement
தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெற்றது.
பின்னா், ஏப்.7-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதும் 171 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாலை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, செங்கம் (தனி) தொகுதியில் 15 வேட்பாளா்களும், திருவண்ணாமலை தொகுதியில் 30 வேட்பாளா்களும், கீபென்னாத்தூா் தொகுதியில் 23 வேட்பாளா்களும், கலசபாக்கம் தொகுதியில் 21 வேட்பாளா்களும், போளூா் தொகுதியில்15 வேட்பாளா்களும், ஆரணி தொகுதியில் 24 வேட்பாளா்களும், செய்யாறு தொகுதியில் 13 வேட்பாளா்களும், வந்தவாசி (தனி) தொகுதியில் 15 வேட்பாளா்கள் என மொத்தம் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா மற்றும் 15 வேட்பாளா்களுக்கு வாக்களிக்கும் வசதி உள்ளது.
எனவே, ஒரு தொகுதியில் 15 வேட்பாளா்களுக்கு மேல் போட்டியிட்டால் 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசபாக்கம், ஆரணி ஆகிய தொகுதிகளில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.