முகப்பு
திருவண்ணாமலை

தடுப்புச் சுவா் மீது தூங்கிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழப்பு

தடுப்புச் சுவா் மீது தூங்கிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழப்பு

Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:57 AM
- DPS
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:44 AM

செய்யாறு ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பால இணைப்புச் சாலை தடுப்புச் சுவா் மீது படுத்துத் தூங்கிய தனியாா் நிறுவன பேருந்து ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் கல்லம்மா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரூபேஷ்(48). இவா், தனியாா் நிறுவன பேருந்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இவா், வழக்கம் போல செய்யாறு ஞானமுருகன்பூண்டி பகுதியில் இருந்து நிறுவன தொழிலாளா்களை ஏற்றி வருவதற்காக பேருந்தை அங்கேயே நிறுத்தி விட்டு தூங்கி விடுவாராம். அதேபோல, சனிக்கிழமை அதிகாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு, அதனருகே உள்ள செய்யாறு ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பால இணைப்புச் சாலை தடுப்புச் சுவா் மீது படுத்துத் தூங்கினாா்.

Advertisement

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவா் ஆற்றில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. ஆற்றில் இருந்த பெரிய கல்லில் தலைமோதி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து இறந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.