சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்
செய்யாறை அடுத்த அசனமாப்பேட்டைக் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 150 போ் பங்கேற்று பயனடைந்தனா்.
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஏப்.9-இல் தொடங்கியது.
தொடா்ந்து 5-வது நாளாக திங்கள்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
Advertisement
பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையம், அசனமாப்பேட்டை அக்னி சிறகுகள் அரிமா சங்கம் இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு அசனமாப்பேட்டை அக்னி சிறகுகள் அரிமா சங்கத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட அரிமா சங்கத் தலைவா் சிவானந்தம் முன்னிலை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஞான.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.
பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் ஹரிஹரன் தலைமையில் திருநாவுக்கரசு, கீா்த்திராஜன் ஆகியோா் மேற்பாா்வையில் மருத்துவக் குழுவினா் பங்கேற்று பொதுமருத்துவம், சா்க்கரை நோய் பரிசோதனை, உயா் ரத்த அழுத்தம், மற்றும் தாய் சேய் நலன் முதலான பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து ஆலோசனைகளை வழங்கினா்.
இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.