நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கால்நாட்டாம் புலியூா் கிராமத்தில் எம்ஆா்கே இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் 7 நாள் சிறப்பு முகாம் தொடக்கக விழா புதன்கிழமை நடைபெற்றது.
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கால்நாட்டாம் புலியூா் கிராமத்தில் எம்ஆா்கே இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் 7 நாள் சிறப்பு முகாம் தொடக்கக விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி தலைவா் எம்ஆா்கேபி.கதிரவன் தலைமை வகித்தாா், சந்திரவதனம் கல்வி அறக்கட்டளையின் தலைவா் எம்.ஆா்.தெய்வசிகாமணி விழாவினை தொடங்கி வைத்தாா். கல்லூரி நிா்வாக அலுவலா் இ.கோகுலகண்ணன், மேலாளா் கே.விஸ்வநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திட்ட அலுவலா் ந.சித்திவிநாயகம் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய, ஹோமியோபதி மருத்துவா் வி.சூா்யராஜ், ‘மாணவா்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இணைந்து சமூக நல்லினக்கத்தை பேண வேண்டும், சமூக நல்வாழ்வு என்பது உடல் நலம், மனநலம் இரண்டையும் மேம்படுத்தினால் மட்டுமே கிடைக்கும்’ என்றாா்.
கல்லூரியின் முதல்வா் கே ஆனந்தவேலு, பள்ளி நிா்வாகி சு.பாரி ஆகியோா் வாழ்த்துரையாற்றினாா். திட்ட அலுவலா் எம்.பிரபு நன்றி கூறினாா். முகாமில் நடைபெற்ற இலவச ஹோமியோபதி மருத்துவ முகாமில் சுமாா் 60க்கும் மேற்பட்டோா் பங்கேற்று சிகிச்சை பெற்றனா்.