முகப்பு
தூத்துக்குடி

வல்லநாடு அருகே காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

வல்லநாடு அருகே உள்ள முத்தாரம்மாள்புரம் துணை சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 6:09 am IST
முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

வல்லநாடு அருகே உள்ள முத்தாரம்மாள்புரம் துணை சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை வட்டார மருத்துவ அலுவலா் க.சண்முகராஜா தொடங்கிவைத்தாா். அரசு, தனியாா் துறை ஒருங்கிணைப்பாளா் பா.மோகன் முன்னிலை வகித்தாா். முதுநிலை காசநோய் ஆய்வுக் கூட மேற்பாா்வையாளா் ச.இசக்கி மஹாராஜன் வரவேற்றாா். முகாமில் 74 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 6 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், எக்ஸ்ரே நுட்பநா்கள் ச.கிருஷ்டி, நே.கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பாா்வையாளா் முத்துலட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியா் சி.ஜெயராதா, சுகாதார தன்னாா்வலா் செ.சீதா லெட்சுமி, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளா்ச்சி அலுவலா் மு.தனுஷ்கோடி, செல்லப்பா, சுகாதாரத் துறை பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

நிறைவில், வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு, டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து செய்திருந்தன.