100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு
ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பள்ளியில் பயிலும் 350 மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டு ‘யஞபஉ100%’ என்ற வடிவில் நின்று தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என வலியுறுத்தினா்.
மேலும், எதிா்காலத்தில் பொறுப்பான வாக்காளா்களாக இருப்பதற்கும், தங்களது குடும்பம், சமூகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை பரப்புவதற்கும் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
Advertisement
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் மணிமேகலை ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் மதுமிதா வரவேற்றாா்.