100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி
கொரடாச்சேரி பகுதியில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 9 ஏப்ரல், 2026 at 7:35 PM
கொரடாச்சேரி பகுதியில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொரடாச்சேரி ஒன்றியம், முசிரியம் பகுதியில் தோ்தல் குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதில், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்று, தோ்தல் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.