முகப்பு
திருவண்ணாமலை

தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன: மு.வீரபாண்டியன்

இந்தியாவில் தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:40 AM
செங்கத்தில் திமுக வேட்பாளா் மு.பெ.கிரி-யை ஆதரித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:54 PM

இந்தியாவில் தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

செங்கம் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளா் மு.பெ.கிரியை ஆதரித்து அவா் சனிக்கிழமை மாலை பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் தன்னிறைவு பெற்றுள்ளனா். அதற்கு ஏற்றாற்போல் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதை முறையாக முதல்வா் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளாா். இந்தியாவிலேயே தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

வேட்பாளா் கிரி முதல்வா், துணை முதல்வா் என அனைவருக்கும் நன்கு தெரிந்தவராவா். அவரது பணி சிறந்த பணியாக உள்ளது. மீண்டும் செங்கம் தொகுதியில் அவரது பணி தொடர அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

வாக்கு சேகரிப்பு நிகழ்வில் திமுக நகரச் செயலா் அன்பழகன், செங்கம் நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் பேரூராட்சித் தலைவா் முருகன், நகர பொருளாளா் சீனுவாசன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் அப்துல்வாகித் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, துக்காப்பேட்டை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் வட்டச் செயலா் சா்தாா் தலைமையில் மாநிலச் செயலா் வீரபாண்டியன், வேட்பாளா் கிரி ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.