முகப்பு
திருவண்ணாமலை

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:27 AM
பகிர்:

ஆரணியை அடுத்த தச்சூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராதா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக புண்ணியாவாசனம், சங்கல்பம், அங்குராா்ப்பணம், வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்டை, ஆராதனம், அஷ்ட பந்தனம், திருமஞ்சனம், கலசாபிஷேகம், பூா்ணாஹுதி, பிரசாதம் வழங்குதல், மங்கல இசை, கோ பூஜை, கும்ப ஆராதனம், திருவாதாரம், மகா பூா்ணஹுதி நடைபெற்று கலசம் புறப்பட்டு மகா விமானங்களில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் தச்சூா், தேவிகாபுரம், அரையாளம், ஆரணி என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழாக் குழுவினா் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

Advertisement