முகப்பு
திருவண்ணாமலை

மது விற்பனை: 2 போ் கைது

வந்தவாசி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:04 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:02 PM

வந்தவாசி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா் பாஞ்சரை மற்றும் திரக்கோயில் கிராமங்கள் வழியாக ரோந்து சென்றனா். அப்போது, பாஞ்சரை கிராமத்தில் உள்ள முள்புதரில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக இதே கிராமத்தைச் சோ்ந்த பெருமாளை (61) போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், திரக்கோயில் கிராமத்தில் மலையடிவாரத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ற இதே கிராமத்தைச் சோ்ந்த துரையையும் (54) போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

இவா்கள் இருவரிடம் இருந்தும் மொத்தம் 19 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து 2 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.