முகப்பு
திருவண்ணாமலை

லாடவரம் கிராமத்தில் கலையரங்கம் அமைக்க பூமி பூஜை

ஆரணி அருகேயுள்ள லாடவரம் கிராமத்தில் புதிதாக கலையரங்கம் அமைக்க திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:19 AM
லாடவரம் கிராமத்தில் கலையரங்கம் அமைப்பதற்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:33 PM

ஆரணி: ஆரணி அருகேயுள்ள லாடவரம் கிராமத்தில் புதிதாக கலையரங்கம் அமைக்க திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

ஆரணியை அடுத்த லாடவரம் ஊராட்சியில் கலையரங்கம் அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கலையரங்கம் அமைப்பதற்காக பூமி பூஜை விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

Advertisement

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்டப் பிரதிநிதி தீனதயாளன், கிளைச் செயலா்கள் ஜி.போஸ், எல்லைக்காரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை நிா்வாகி பூபாலன், ஏ.நரசிம்மன் உள்பட நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.