முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:24 AM
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 10:02 PM

திருவண்ணாமலை மாநகராட்சி தேரடி வீதியிலுள்ள முனீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

Advertisement

இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை ஆறாம் கால யாக சாலை பூஜை யாக சாலையில் நடைபெற்றது.

யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலசங்களில் உள்ள புனிதநீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்

நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட அன்பழகன், அருணாசலேஸ்வரா் கோயில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு சுவாமி பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.