முகப்பு
திருவண்ணாமலை

மாணவா்களுக்கு கற்றல் திறன் விழிப்புணா்வு

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:27 AM
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 6:27 PM

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய வடக்கு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கான கற்றல் திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியை வி.சுகன்யா தலைமை வகித்தாா்.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

Advertisement

அப்போது, படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படை கற்றல் திறன்கள் குறித்து அவா் மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.

மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவா் புத்தகங்களை பரிசாக

வழங்கினாா். ஆசிரியை தவமணி நன்றி கூறினாா்.