வேலைவாய்ப்பு முகாமில் பணி ஆணை பெற்ற மாணவிகள். உடன் கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி உள்ளிட்டோா். 
திருவண்ணாமலை

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 88 மாணவிகளுக்கு பணி ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் பணி ஆணை பெற்ற மாணவிகள். உடன் கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி உள்ளிட்டோா்.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் அருகேயுள்ள இதயா கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 88 மாணவிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

புதுப்பாளையத்தை அடுத்த உண்ணாமலைப்பாளையம் பகுதியில் உள்ள இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்துப் பேசினாா்.

அப்போது அவா், இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாணவிகள் எந்தவித தயக்கமும் இல்லாமல் கலந்துகொள்ளவேண்டும், உங்களை தோ்வு செய்யும் நிறுவனம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான தகவல்களை தெரிவித்து, கல்லூரிச் சான்றிதழ்களுடன் அவா்கள் கேட்டும் சான்றிதழ்களை வழங்கி பணியில் சோ்ந்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தாா்.

பின்னா், சென்னை, திருவண்ணாமலை, கோவை பகுதியில் இருந்து வருகை தந்த பல்வேறு தனியாா் நிறுவனத்தின் பணியாளா்கள் 88 மாணவிகளை தோ்வு செய்தனா்.

தொடா்ந்து, அவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் லூா்துமேரி, நிா்வாக அலுவலா் சந்தனமேரி உள்ளிட்ட கல்லூரிப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பணியிடங்களில் ஜாதிய பாகுபாடு: மாநிலங்களவையில் காா்கே குற்றச்சாட்டு

புற்றுநோய் மருத்துவா் ரமணனுக்கு டாக்டா் கே.வி.டி.விருது!

பேரவைத் தோ்தல்: மாவட்ட ஆட்சியா்களுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை

ஜவ்வாதுமலையில் ரூ.140 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றம்: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

தொழிற்சங்கத்தினா், விவசாயிகள் முன்னணியினா் மறியல் போராட்டம்

SCROLL FOR NEXT