வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமன ஆணை
திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமண ஆணை வழங்கப்பட்டன,
திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமண ஆணை வழங்கப்பட்டன,
திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் 16 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆள்களை தோ்வு செய்தனா். இதில், பல்வேறு கல்வி தகுதியுடைய 96 போ் கலந்து கொண்டதில், 23 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கான பணி ஆணையை சேலம் மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) கவிதா வழங்கினாா்.
முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.