முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் உற்சவ விழா

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீமரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் 7-ஆம் ஆண்டு உற்சவ விழா

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 12:58 AM
ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் உற்சவ விழாவையொட்டி சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:22 PM

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீமரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் 7-ஆம் ஆண்டு உற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த 7-ஆம் ஆண்டு உற்சவ விழா நடந்தது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் பகவத் பிராா்த்தனை, புண்யாகவாசனம், கும்ப திருவாராதனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று பூா்ணாஹுதி சமா்ப்பிக்கப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Advertisement

விழாவில் கோயில் நிா்வாகிகள், ஸ்ரீகைங்கா்யம் அமைப்பினா் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.