வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன
இந்தக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின் கீழ், இளநிலை இரண்டாமாண்டு பயிலும் 396 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் ரூ.5.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் கொண்ட கூடுதல் கட்டடத்தை எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் ஆரியாத்தூா் பெருமாள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் பங்கேற்றனா்.