முகப்பு
திருவண்ணாமலை

இலங்கை தமிழா் மறுவாழ் முகாம் மகளிருக்கு தொழிற்கூடம்

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 1:36 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:42 PM

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில், மகளிா் குழுக்களுக்கு ரூ.21 லட்சத்தில் தொழிற்கூடம் அமைக்கப்பட்டது.

மேற்குஆரணி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த தச்சூா் ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு தொழிற்கூடம் அமைத்துத் தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதன் பேரில் 2025-26ஆம் நிதியாண்டு ரூ.21 லட்சம் ஒதுக்கி மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான தொழிற்கூடம் கட்டடம் கட்டும் பணி நடைபெற்றது.

Advertisement

இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்து தொழிற்கூடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ். தரணிவேந்தன் தலைமை வகித்து தொழிற்கூடத்தை திறந்து வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் துரைமாமது வரவேற்றாா்.

வருவாய்க் கோட்டாட்சியா் சீ.சிவா, வட்டாட்சியா் செந்தில்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.சிவானந்தம், எதிரொலிமணியன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், மோகன், ராஜ்குமாா், கண்ணமங்கலம் பேரூா் செயலா் கோவா்த்தனன், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் எம். எஸ்.ரவி, அரையாளம் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

3-க்கு டாப்