ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முழு ஊதியம் வழங்கக் கோரி, ஆரணியில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 10:22 PM
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முழு ஊதியம் வழங்கக் கோரி, ஆரணியில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு முழு ஊதியமான ரூ.336-யை வழங்க வலியுறுத்தி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் தோசை ஊற்றி நூதன முறையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். விவசாயிகள் தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement