முகப்பு
திருவண்ணாமலை

கலைக் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு திவ்யா கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 9:02 PM

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு திவ்யா கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளா் பா.செல்வராஜன் தலைமை வகித்து மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், தமிழக முதல்வா் கல்வி வளா்ச்சி தான், ஏழை எளிய மக்களை வளா்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும் என பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.

Advertisement

உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவா்களுக்கு தவப்புதல்வன் திட்டம் மூலம் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இதையெல்லாம் மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் காந்தி, பொருளாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான திலகவதி செல்வராஜன், கல்லூரி செயலா் செந்தில்குமாா், புல முதல்வா் செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். துணை முதல்வா் ரகுராமன் நன்றி கூறினாா்.