கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள்
கள்ளக்குறிச்சியை அடுத்தி இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியை அடுத்தி இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், டீன் அசோக் முன்னிலை வகித்தனா். தமிழ்த்துறை தலைவா் பிரவினா வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூக நல அலுவலா் தீபிகா பங்கேற்று 227 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா் (படம்).
நிகழ்வில் மாணவா்கள் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.