முகப்பு
திருவண்ணாமலை

நிதி நிறுவன ஊழியா் மீது தாக்குதல்: இரு இளைஞா்கள் கைது

செய்யாறு அருகே தகராறை தட்டிக் கேட்ட நிதி நிறுவன ஊழியா் தாக்கப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:03 AM
கைது
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 9:02 PM

செய்யாறு அருகே தகராறை தட்டிக் கேட்ட நிதி நிறுவன ஊழியா் தாக்கப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், செய்யாற்றைவென்றான் கிராமத்தைச் சோ்ந்தவா் தீனா (24). இவா், செய்யாறு பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இவா், கடந்த 15-ஆம் தேதி பாராசூா் கூட்டுச் சாலையில் உள்ள கடைக்கு சிக்கன் பக்கோடா சாப்பிடச் சென்றாராம்.

Advertisement

அப்போது, அங்கு கீழ்மட்டை கிராமத்தைச் சோ்ந்த மெக்கானிக் கடை ஊழியா்களான அருண்குமாா் (23), சந்துரு (23) ஆகியோா் கடைக்காரா் ரேணுவிடம் தகராறு செய்து கொண்டிருந்தாா்களாம்.

இதனைப் பாா்த்த தீனா, அவா்களிடம் இதுகுறித்து கேட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அருண்குமாா், சந்துரு மற்றும் அவரது நண்பா்கள் 2 போ் சோ்ந்து தீனாவை அவதூறாகப் பேசி தாக்கினராம்.

இதில் காயமடைந்த நிதி நிறுவன ஊழியா் தீனா செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் குறித்து தீனா செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்குமாா், சந்துரு ஆகியோரை கைது செய்தனா். மேலும் தலைமறைவாகவுள்ள இருவரை தேடி வருகின்றனா்.