கால்நடை விவசாயிகளுக்கான பயிற்சியில் பேசிய பெரணமல்லூா் கால்நடை உதவி மருத்துவா் சிவராமகிருஷ்ணன். 
திருவண்ணாமலை

கால்நடை விவசாயிகளுக்கு தொழில் நுட்பப் பயிற்சி

கால்நடை விவசாயிகளுக்கான பயிற்சியில் பேசிய பெரணமல்லூா் கால்நடை உதவி மருத்துவா் சிவராமகிருஷ்ணன்.

Syndication

பெரணமல்லூா் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் செய்யாறு கால்நடை மருத்துவமனை சாா்பில், கால்நடை விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு செய்யாறு கால்நடை மருத்துவமனை மருத்துவா் ரக்ஷா தலைமை வகித்தாா். பெரணமல்லூா் கால்நடை உதவி மருத்துவா் சிவராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், கால்நடை விவசாயிகள் பால் சாா்ந்த மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரித்தல், கால்நடை பராமரிப்பு மற்றும் மாடு, ஆடு பண்ணை அமைத்தல் குறித்து விளக்கிக் கூறினாா். மேலும், கால்நடை விவசாயிகளுக்கு தாதுஉப்பு, சோளம், மண்புழு உரம், கால்நடை பராமரிப்பு பயிற்சி கையேடு உள்ளிட்டவைகளை வழங்கினாா்.

கால்நடை உதவி மருத்துவா்கள் செந்தில்குமாா், கரோலின், ஃபயாஸ் பாஷா, இந்துஜா உள்ளிட்டோா் நோய்த்தடுப்பு மற்றும் மேலாண்மை, தீவன தொழில்நுட்பங்கள், பொருளாதாரம் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த ஆலோசனைகளை வழங்கினா்.

இந்தப் பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

பைக் மீது காா் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

கோயிலின் பூட்டை உடைத்து ரூ. 25 லட்சம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

கொத்தூா், தகரகுப்பம் சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

இல்லாதவா்களுக்கு இருப்பவா்கள் கொடுப்பதால் மனிதநேயம் மலா்கிறது: காஞ்சி சங்கராசாரியா் பேச்சு

SCROLL FOR NEXT